சரஹணபவ மந்திரத்தை எப்படி சொன்னால் என்ன பலன்

முருகனை வழிபட கஷ்டமான எந்த மந்திரமும் தேவை இல்லை இந்த ஆறு எழுத்து மந்திரமே போதும் இந்த ஆறு எழுத்தை எப்படி மாற்றி சொன்னால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இங்கு விளக்கமாக கூறியுள்ளேன் படித்து பயன் பெறு,
உங்கள் தேவை எதுவோ அதற்குண்டான மந்திரத்தை தேர்ந்தெடுத்து ஜெபிக்கவும். மந்திர ஜெபம் வளர்பிறை காலத்தில் விசாகம் அல்லது கார்த்திகை நட்சத்திரத்தன்றோ , செவ்வாய்க்கிழமை அன்றோ தொடங்கினால் சிறப்பு.90 நாட்கள் குறைந்தது 108 அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்.
முதல் நாளும் , மந்திர ஜெபம் முடிக்கும் நாளும் வெற்றிலை,பாக்கு,திணை மாவு,பழங்கள் வைத்து வழிபடவும்.மற்றைய நாட்களில் உங்களால் இயன்றதைப் படைக்கலாம் "ஓம் குகாய நம"
1.சரஹணபவ - என தொடர்ந்து ஜெபித்து வர சர்வ வசீகரம் உண்டாகும்.
2.ரஹணபவச - என தொடர்ந்து ஜெபித்து வர செல்வம், செல்வாக்குடன் கூடிய வளவாழ்வு உண்டாகும்.
3.ஹணபவசர - என தொடர்ந்து ஜெபித்து வர பகை,பிணி நோய்கள் தீரும்.
4.ணபவசரஹ - என தொடர்ந்து ஜெபித்து வர எதிர்ப்புகள், எதிரிகளால் வரும் துன்பங்கள் நீங்கும்.
5.பவசரஹண - என தொடர்ந்து ஜெபித்து வர உலகத்து உயிர்கள் யாவும் மனிதர்கள் முதல் ஜீவ ஜந்துக்கள் வரை நம்மை விரும்பும்.
6.வசரஹணப - என தொடர்ந்து ஜெபித்து வர எதிரிகளின் சதி,அவர்களால் வரும் தீமைகள் யாவும் செயலற்றுப்போகும்.